பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 18, 2013

தாலி



கேள்வி: ஒரு பெண் தாலியை கழற்றி எறிவது ஆணவத்தின் அடையாளமா? ஆத்திரத்தின் அடையாளமா? வெறுப்பின் அடையாளமா?
மனுஷ்யபுத்திரன் பதில்: அவளுக்கு அறிவு வந்துவிட்டதன் அடையாளம்
நன்றி: குங்குமம்

இதை தூக்கி போட்டால் உடம்பு தாங்குமா ?


Read More...

’அம்மா’வின் மூவ் என்னவாக இருக்கும்?

மாலன் தன்னுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் எழுதியது.

மாநிலங்களவைத் தேர்தல்: சுவாரஸ்யமான சதுரங்கம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தமுறை மாநிலங்களவைத் தேர்தல் சுவையான திருப்பங்களைக் கண்டிருக்கிறது. இந்த அரசியல் விளையாட்டில், ஜெயலலிதா ஒரு சாதுர்யமான சதுரங்க ஆட்டக்காரரைப் போல காய் நகர்த்தி வந்திருக்கிறார்.I will decide என்ற அவரது கம்பீரம் அல்லது அகங்காரம் இந்த ஆட்டத்தில் மீண்டுமொருமுறை வெளிப்பட்டிருக்கிறது.

அவரது கெட்டிக்காரத்தனமான நடவடிக்கைகள் மூலம் தனது கட்சி, தனது கூட்டணிக் கட்சி ஆகியோரின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொண்டதோடுமட்டுமல்லாமல், தனது எதிரிகளான தேமுதிகவையும் திமுகவையும் நேருக்கு நேர் மோதிக் கொள்கிற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் யார் ஜெயிக்க வேண்டும் என்பதையும் அவர்தான் தீர்மானிக்கப் போகிறார் என்பதுதான் சுவாரஸ்யம். (அது எப்படி என்பது கீழே)

அது மட்டுமல்ல, காங்கிரசையும் ஒரு இக்கட்டான கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். காங்கிரஸ் இப்போது திமுகவை ஆதரிக்கும் என்றால் காங்-திமுகவிடையே ஓர் ரகசிய உறவு தொடர்கிறது என்ற பிரசாரத்தை முன்னெடுக்க அது உதவும். தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிற காங்கிரசோடு அது குடும்ப உறுப்பினர் பதவி பெறுவதற்காக உறவு கொள்கிறது என்ற பிரச்சாரத்தை திமுக எதிர் கொள்ள நேரும். ஒருவேளை காங்கிரஸ் திமுகவை ஆதரிக்கவில்லை என்றால் திமுக தோற்கும் என்பது மட்டுமல்ல, தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதான தோற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.

இதன் இன்னொரு கோணம்தான் தேமுதிகவும். காங் ஆதரிக்காவிட்டால் தனிமைப்படுத்தப்படும். ஆதரித்தால் துரோக முத்திரை விழும்

அதிமுக வசம் 4x34=136 போக மீதம் உள்ள 15 கம்யூனிஸ்ட் வேட்பாளருக்குப் போகும். அவர்கள் வசம் (10+8+1) 19 இருக்கிறது எனவே அவர்களது வெற்றியும் உறுதி.

தனது அணியின் வெற்றியை மட்டுமல்லாமல் தன் எதிரிகளில் யார் ஜெயிக்கவேண்டும் என்பதையும் அதிமுகவே தீர்மானிக்க வாய்ப்பு இருக்கிறது

தேமுதிக தலைமையோடு முரண்பட்ட 7 ச.ம.உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சியில் உள்ள மற்ற கட்சிகளின் ச.ம.உறுப்பினர்கள் (2+2=4) அதிமுகவின் வழிகாட்டுதலின்படி வாக்களிப்பார்கள் என்றால் அந்த வாக்குகள் தேமுதிக, திமுக இருவரில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.

இந்த queer logicன் அடிப்படையில் எழும் கேள்வி: அதிமுக இந்த வாக்குகளை கனிமொழிக்கு அளிக்கச் சொல்லுமா?

சொல்லாது என்பது வெளிப்படையான ரகசியம். கனிமொழியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் இளங்கோவனுக்கே தேமுதிக அதிருப்தி உறுப்பினர்களை தங்களது இரண்டாவது preference வாக்குகளை அளிக்கச் சொல்லலாம்.. ஆனால் தேமுதிகதான் தன் முதல் எதிரி என்பதைப் போலச் செயல்பட்டுவரும் அதிமுக தலைமை அப்படி ஒரு முடிவை எடுக்குமா? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

இரண்டு தரப்புக்குமே வேண்டாம் எல்லோரும் எங்கள் அணிக்கே வாக்களியுங்கள் என்று அது முடிவு எடுக்குமானால் கனிமொழி வென்றுவிடலாம். ஏனெனில் 34 வாக்குகள் இல்லையென்றாலும் கடைநிலையில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் யார் என்பதன் அடிப்படையில் ஆறாவது வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார். அப்போது தேமுதிகவைவிட திமுக ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற்றிருக்கும்

’அம்மா’வின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?

இரண்டாவது preference வாக்குகளை யாருக்கும் போடாமல் இருந்தால் என்ன ஆகும் மாலன் சார் ?

Read More...

Monday, June 17, 2013

தொடரும் பிஜேபியின் சொதப்பல் - எ.அ.பாலா

யுபிஏ அரசின் பல சறுக்கல்களை முன்னிறுத்தி, பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் செய்ததைத் தவிர்த்து, 2014 தேர்தலுக்கு முன்பாக, அரசியல் சூழலை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள பிஜேபி எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தோன்றவில்லை. ”பளபளக்கும் இந்தியா” என்ற முழக்கத்துடன், வாஜ்பாயி தலைமையில் 2004 தேர்தலிலும், பின்னர் 2009-ல் அத்வானி தலைமையில் (யுபிஏ அரசின் பிரும்மாண்ட ஊழல்களினால் இருந்த சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்த இயலாமல்!) பிஜேபி மண்ணைக் கவ்வியது.

தற்போது மீண்டும், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசின் ஊழல்கள் மற்றும் திடமற்ற பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றினால் மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் மேல் ஏற்பட்டிருக்கும் பெரிய அதிருப்தி நிலவும் நிலைமையிலும், நரேந்திர மோதியை தேர்தல் பிரச்சாரத் தலைவராக (அதாவது, 2014 தேர்தலுக்கு பிரதம மந்திரியாக மோதியை அறிவிப்பதற்கு அச்சாரமாக) பிஜேபி (RSS அதன் கையை முறுக்கியதன் விளைவாக்) அறிவித்துள்ளதை சொதப்பலின் உச்சம் என்று தான் கூற வேண்டும். பிஜேபியை பின்னாலிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசியல் யதார்த்தம் குறித்த அறிவு குறைவு என்பது தெரிந்தது தான்.

அகண்ட பாரதம், ஹிந்துத்வா போன்றவைகளை வைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ்/பிஜேபி இன்னும் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமாக உள்ளது. குஜராத்தில் மோதி சிறந்த நிர்வாகத்தை அளித்து வருவது உண்மை தான் என்றாலும், மோதியை பெரும்பான்மையான இந்திய மக்களால் மதிக்கப்படும் “தேசிய”த்தலைவராக எண்ணுவதில் பெரிய அர்த்தமில்லை. யுபிஏ அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதை மட்டுமே முக்கியக் குறிக்கோளாக பிஜேபி கொண்டிருந்தால், இன்று ஐக்கிய ஜனநாயக முன்னணியிலிருந்து அதன் முக்கியக் கூட்டாளி JD(U) விலகும் நிலை ஏற்பட்டிருக்காது. 2014-ல் ஆட்சியைப் பிடிக்க பிஜேபி அதன் கூட்டணியில் இன்னும் சில பிராந்தியக் கட்சிகளைச் சேர்க்க முனைய வேண்டுமே அன்றி, கூட்டணியில் இருக்கும் கட்சிகளை துரத்தி விடக் கூடாது!

பிஜேபியின் இந்த நிலைமைக்கு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே காரணமில்லை, பிரதமர் பதவி ஆசை கொண்ட அதன் சில மூத்த தலைவர்களும் தான். 2014-ல் கூட்டணி துணை கொண்டு மட்டுமே ஆட்சிக்கு யாருமே வர இயலும் என்ற சூழலில், பொதுவாக அனைவருக்கும் ஏற்புடைய அத்வானியை பிஜேபி முன்னிறுத்தி இருப்பதே, சமயோஜிதமான முடிவாக இருந்திருக்கும். அத்வானிக்கு வயதாகி விட்டதாலேயே அவர் ஓரங்கட்டப்பட வேண்டும் என்ற வாதத்தில் அர்த்தமில்லை! அவர் ஒருவர் தான் இந்தியாவில் கிழ அரசியல்வாதியா என்ன? மேலும் அவரை விட வயதில் குறைந்தவர்களைக் காட்டிலும் அவர் மன அளவில், உடலளவில் திடமாகவே இருக்கிறார். நாடு முழுதும் நன்கு அறியப்பட்ட, பல கட்சிகளின் தலைமையுடன் நல்லுறவு வைத்துள்ள ஒரு தேசியத் தலைவர் அவர் என்பது தான் யதார்த்தம்.

பிராந்தியக் கட்சிகள் பல மாநிலங்களில் வலிமையுடன் இருக்கும் சூழ்நிலையில், நல்லதொரு கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்காமல், 2014 தேர்தலுக்குப் பின் பேரம் பேசி மோதி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்று பிஜேபி நினைப்பது, பகல் கனவாகி விடும் அபாயம் இருக்கிறது. மேலும், 2014 தேர்தலுக்குப் பின், தனிப்பெருங்கட்சியாக காங்கிரஸ் அமைவதிலும் / பிஜேபி அமைவதிலும் வித்தியாசம் இருக்கத் தானே செய்கிறது! இப்போது, மூன்றாவது அணி (இது நடைமுறை சாத்தியம் என்று நான் கருதவில்லை) குறித்த பேச்சு அடிபடுவதற்கும், பிஜேபியின் “மோதி முடிவே” காரணம்.

காங்கிரஸ் கட்சி இந்த குழப்பத்தில், மகிழ்ச்சியாக குளிர் காய்வது, தொலைக்காட்சியில் அதன் தலைவர்களின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது. ராகுலை 2014 தேர்தலுக்கு பிரதம மந்திரி வேட்பாளாராக அறிவிப்பதை காங்கிரஸ் தள்ளிப் போடுவதை நல்லதொரு அரசியல் யுக்தியாகத் தான் நோக்க வேண்டும்! சரியான தருணத்தில் காங்கிரசின் பலம் கூடி விட்டது மக்களின் துர்பாக்கியம் தான். எதிர்காலத்தில் மோதி இந்தியப் பிரதமராக ஆக வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மோதி தற்சமயம் சற்றே பொறுமை காத்திருக்கலாம்!

மதச்சார்பின்மையில் பிஜேபியை விட காங்கிரஸ் எந்த விதத்திலும் மேல் இல்லை (எ,கா: 1984 சீக்கியப் படுகொலை) என்றாலும், TMC, JD(U), SP, BSP, BJD, RJD, DMK, NC ... என்று பல பிராந்தியக் கட்சிகள் (இன்றைய லோக்சபாவில் இவைகளின் மொத்த பலம் 163 சீட்டுகள்) மோதியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், பிஜேபி சற்றாவது யோசிக்க வேண்டாமா! தனது பிரதம மந்திரி வேட்பாளர் யாரென்று தீர்மானிக்க பிஜேபிக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா என்பதல்ல பிரச்சினை. ”கூட்டணி அரசு” காலகட்டத்தில், தக்க ஆலோசனை செய்து, சரியான முடிவெடுப்பது தான் சமயோஜிதமாகும்.

மக்கள் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கையே, பல குழப்பங்களுக்கு நடுவில், 9 ஆண்டுகள் காங்கிரஸ், பிரதமராக வைத்திருக்கும்போது, அத்வானி போன்ற ஒரு Tall Leader-ஐ ஓரங்கட்டி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கோண்டிருக்கும் பிஜேபியைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இதை எழுதும்போது ராஜ்நாத் சிங் மோதிக்கு ஆதரவாக, JD(U)வை குற்றம் சாட்டி, தொலைக்காட்சியில் நமக்குப் புரியாத பாஷையில் (ஹிந்தியில்) ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க தமாஷாக இருந்தது :) “இன்று பீகாருக்கு கறுப்பு தினம்” என்றும் முழங்கினார்! பாவம் பிஜேபிக்கு 2014 தேர்தலே கறுப்பாகி விடும் போலிருக்கிறதே!

- எ.அ.பாலா


ராஜ்நாத் சிங் மோதிக்கு ஆதரவாக.. தொலைக்காட்சியில் நமக்குப் புரியாத பாஷையில் (ஹிந்தியில்) ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க தமாஷாக இருந்தது :)". இந்த பதிவை படிக்கும் நமக்கும் அதே உணர்வு தான் வருகிறது !

Read More...

Sunday, June 16, 2013

பெங்களூரில் இளையராஜா



மெட்ராஸ்லேர்ந்து பெங்களூருக்கு டிக்கெட் கிடைக்காததால் #Raja70BLR அட்டெண்ட் பண்ண முடியல....

Read More...

Saturday, June 15, 2013

இயக்குனர் மணிவண்ணன் அஞ்சலி



அஞ்சலி

Read More...

Thursday, June 13, 2013

செகுலரிசமும் மோதியும் - பத்ரி

(1) செய்து காட்டுவார் மோதி

(2) பாஜகவின் கூட்டாளிகள்

தினம் தினம் மோதியா என்று அலுத்துக்கொள்ளாதீர்கள். சில கேள்விகள் எழுப்பப்படும்போது அவை பற்றி எனக்கே தெளிவு ஏற்படுத்திக்கொள்வதற்காக இந்தப் பதிவுகள். இன்னமும் நிறையக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே தொடர்ந்து மேலும் சில பதிவுகளும் அவ்வப்போது வரும்.

ஐக்கிய ஜனதா தளம் ஒரு செகுலர் (மதச்சார்பற்ற) கட்சி என்று கருதப்படுகிறது. பாஜக ஒரு மதச்சார்புள்ள கட்சியாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்துத்துவம் அவர்களுடைய நோக்கங்களில் ஒன்று என்று அக்கட்சியைச் சேர்ந்த பலருமேகூடச் சொல்கிறார்கள். சிவ சேனை ஓர் இந்துத்துவக் கட்சியாகவே காணப்படுகிறது. அது தவிர, அகாலி தளம் என்ற கட்சி, சீக்கியம் என்கிற மதத்தின்மீதாகக் கட்டப்பட்டுள்ளதால் அதுவும் மதச்சார்புள்ள கட்சிதான்.
அதுதவிர முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் மதச்சார்புள்ளவையே. வெளிப்படையாகக் கிறிஸ்தவ மதச்சார்பை வெளிப்படுத்தும் கட்சிகள் என்று ஏதும் இந்தியாவில் இல்லை. மிச்சமுள்ள அனைத்துக் கட்சிகளும் என்ன சொன்னாலும் செய்தாலும், அவர்கள் அனைவருமே, காங்கிரஸ் உள்பட, செகுலர் கட்சிகளாகவே அறியப்படுகிறார்கள்.



இந்துத்துவ அரசியலின் அடிப்படையே, ‘பெரும்பான்மையான இந்துக்கள் ஏதோ ஒருவிதத்தில் வஞ்சிக்கப்படுகிறார்கள்; சிறுபான்மையினர், அதுவும் முக்கியமாக முஸ்லிம்கள், சலுகைகளாகப் பெற்றுத் தள்ளுகிறார்கள்’ என்ற கருத்து. இதற்கு முற்றிலும் மாறாக, முஸ்லிம்கள், தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக நினைக்கிறார்கள். எந்த ஒரு செகுலர் கட்சியாலும் தங்களுக்கு இதுகாறும் நன்மைகள் கிடைத்ததில்லை என்கிறார்கள். இப்போது கொடுக்கப்படும் சலுகைகள் போதவே போதா என்கிறார்கள். முஸ்லிம்கள் தொடர்ந்து பின்தங்கிய வகுப்பினர்களாகவே இருந்துவருவதாக அவர்கள் புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டுகிறார்கள்.

பாஜகவுக்கான எதிர்ப்பு முஸ்லிம்களிடமிருந்து மட்டும் வருவதில்லை. மூன்று முக்கியமான இடங்களிலிருந்து வருகிறது. (1) முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர். (2) தலித்துகள். (3) திராவிடவாதிகள் (அல்லது) நாத்திகவாதிகள்.

முஸ்லிம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்வது எளிது. இது பாபர் மசூதி தாண்டியது. குஜராத் கலவரம் தாண்டியது. தாம் சிறுபான்மையினராக இருக்கும் நாட்டில் தமக்குப் பாதுகாப்பு வேண்டும்; தம்முடைய வளர்ச்சிக்கு ஊக்கங்கள் வேண்டும்; தம்முடைய வழிபாட்டுமுறைக்கு எந்தக் குந்தகமும் வரக்கூடாது; தம்முடைய பின்தங்கிய நிலை மாறவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது மிக நியாயமானதே. இந்த மாற்றங்கள் எவையும் பாஜகவிடமிருந்து கட்டாயமாக வர முடியாது என்ற கருத்து முஸ்லிம்களிடம் ஆழமாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கருத்தை யாராலும் புறந்தள்ளிவிட முடியாது. பாஜகவைவிட காங்கிரஸ் அல்லது மூன்றாவது அணியிடம் தங்களுக்கு அதிக சலுகைகள், வாய்ப்புகள் கிடைக்கும் என்று முஸ்லிம்கள் சொன்னால் அதை எப்படி மறுக்க முடியும்?

பாஜகவில் உள்ள ஒரு சில டோக்கன் முஸ்லிம் அரசியல்வாதிகள் (ஷாநவாஸ் ஹுசைன், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா, இறந்துபோன சிக்கந்தர் பக்த்) தாண்டி சமீபத்தில் குஜராத்தில் சில புதிய இளம் முஸ்லிம் தலைவர்கள் உருவாகியுள்ளனர். இவர்களுடைய கருத்து: ‘மோதியின் ஆட்சியில் முஸ்லிம்கள், இந்துக்கள் என்று அனைவருமே முன்னேறுகிறார்கள்; இதுதான் உண்மையான வளர்ச்சி; அடையாள அரசியல்தான் ஆபத்தானது; இந்த அடையாள அரசியலால்தான் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களைப் பின்தங்கியவர்களாகவே வைத்துள்ளனர்.’ ஆனால் இந்தக் கூற்றுகளை இன்று ஒரு செகுலர் நபர் எளிமையாக ஒதுக்கிவிட முடியும். ஏனெனில் நம் கருத்துகள் நம் நம்பிக்கையிலிருந்தே உருவாகின்றன. தெளிவான சான்றுகளிடமிருந்து அல்ல. நாம் சான்றுகளைத் தேடிப் போவதில்லை. அதற்கான நேரமோ வலுவோ நம்மிடம் கிடையாது.

இன்று முஸ்லிம் கட்சிகளும் தனிப்பட்ட முஸ்லிம்களும் பாஜகவுக்கு, அதுவும் முக்கியமாக மோதிக்கு, வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இத்தனை ஆண்டுகள் கழித்துத்தான் அத்வானிக்கு ஸ்பெஷலாக செகுலர் முத்திரை கிடைத்துள்ளது. இதற்குமுன் வாஜ்பாயிக்குக் கொஞ்சமாகக் கிடைத்தது. எனவே மேலும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கும் இந்த முத்திரை கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலேயே போகலாம்.

மோதி முஸ்லிம்களின் ஆதரவு என்ற முத்திரையைப் பெற்றபிறகுதான் பிரதமர் ஆகலாம் என்ற வீட்டோ இருந்தால் அவரால் என்றுமே இந்தியாவின் பிரதமர் ஆக முடியாது. இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் அப்படிப்பட்டதல்ல. உண்மையில் பாஜகவில் யாருக்குமே - ஏன் நாளை ஷாநவாஸ் ஹுசைன் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டாலுமேகூட - இந்த முத்திரை கிடைக்காது. இன்றைய நிலையில் பாஜகவுக்கு வெகு சில முஸ்லிம்களே வாக்களிப்பார்கள். மோதி தலைவராக இருந்தாலும் சரி, தலைவராக இல்லாவிட்டாலும் சரி.

இந்தக் காரணங்களாலேயே மோதி ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லிவிடலாமா? அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் பொதுவாக கருப்பினத்தோரின் (ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்) வாக்குகள் டெமாக்ரடிக் கட்சிக்குத்தான் கிடைக்கும். இது ஒபாமா இப்போது வந்ததால் அல்ல. டெமாக்ரடிக் கட்சி சிறுபான்மையினர் நலனை முன்வைக்கும் என்ற கருத்து அங்கே உள்ளது. ரிபப்ளிகன் கட்சி ஒருவிதத்தில் அடிப்படைவாதம் பேசக்கூடியது. தீவிரவாத எவாஞ்செலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவு கொண்ட கட்சி அது. அதேபோல லத்தீனோக்கள், ஆசியர்கள் ஆகியோரும் பொதுவாக டெமாக்ரடிக் கட்சிக்கு ஆதரவு அளிப்பவர்கள். தம் நலன் பொதுவாக டெமாக்ரட்டுகள் ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தாலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் லத்தீனோக்கள், ஆசியர்கள் ஆகியோர் தொடர்ந்து டெமாக்ரட்டுகளுக்கே அதிக வாக்கை அளித்துவருகின்றனர். ரிபப்ளிகன் கட்சியிலும்கூட இந்தக் குழுவினரிலிருந்து சில டோக்கன் ஆட்களைப் பார்க்கலாம். எப்படி பாஜகவில் சில டோக்கன் முஸ்லிம்கள் இருக்கிறார்களோ, அப்படி.

ஆனாலும் ரிபப்ளிகன் கட்சி அவ்வப்போது ஜெயித்துக்கொண்டுதான் வருகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வீட்டோ ஏதும் கிடையாது. எப்போது பெரும்பான்மை அமெரிக்கர்கள் ஒட்டுமொத்தமாக ரிபப்ளிகன் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்களோ அப்போது அவர் வெற்று பெறுகிறார். எனவே முஸ்லிம்கள் ஓட்டு விழாவிட்டாலும்கூட அல்லது மிகக் குறைவாக விழுந்தாலும்கூட பாஜகவும் மோதியும் வெல்ல முடியும்.

பாஜகவுக்கு தலித்துகளிடமிருந்தும் திராவிடவாதிகளிடமிருந்தும் எதிர்ப்பு உள்ளது என்று சொல்லியிருந்தேன். இதற்கான காரணங்கள் வேறானவை.

பாஜகவும் அதன் ஆத்மாவாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் உயர்சாதி, பிராமணியக் கருத்துகளை முன்வைக்கும் அமைப்பு என்பது பொதுவான இடதுசாரி லிபரல் சிந்தனையாளர்களின் கருத்து. இதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. பாஜக என்ற அரசியல் கட்சி காங்கிரஸுடன் ஒப்பிடும்போது இளம் கட்சிதான். அது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தப் பார்வையிலிருந்து ஜன சங்கமாக உருவாகி, பின் ஜனதாவுடன் ஐக்கியமாகி, பின்னர் மீண்டும் பாரதிய ஜனதாவாக மறு உருவெடுத்தது. அதன் சித்தாந்தப் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக inclusive-ஆக மாறிவருகிறது என்றே நான் கருதுகிறேன். இக்கட்சியில் பிற்படுத்தப்பட்டவர்களின், தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் என்ன என்று கணக்கு எடுக்கக்கூடிய நிலையில் இப்போது நான் இல்லை. ஆனால் இது ஒரு சுவாரசியமான ஆய்வாக இருக்கும்.

இன்று காங்கிரஸ் கட்சியில் பாஜகவைவிட அதிகமான எண்ணிக்கையில் மேல்மட்டத்தில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் இருப்பார்கள் என்று யூகிக்கிறேன். ஆனால் நரேந்திர மோதியே பிற்படுத்தப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்தான் என்பதை இங்கே கவனிக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீடு இருக்கும் ஒரே காரணத்தால்தான் அவர்களால் இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்தச் சட்டம் இயற்றும் மன்றங்களுக்குச் செல்ல முடிகிறது. இன்றும்கூட பொதுத் தொகுதியில் நிற்பதற்கு இந்தச் சாதிகளைச் சேர்ந்தோருக்கு பெரும் அரசியல் கட்சிகளிடமிருந்து பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் தம் எண்ணிக்கை காரணமாகவும் தம் அரசியல் வலு காரணமாகவும் ஆட்சியில் தமக்குரிய இடத்தை வெகுவாகப் பிடித்துவிட்டனர். சொல்லப்போனால் இன்றைய இந்திய அரசியலில் மிக முக்கியமான பங்கைச் செலுத்திக்கொண்டிருப்பது இடைநிலைச் சாதிகள் என்று சொல்லப்படுவோரே.

தலித்துகள் தனியாக பாஜகமீது பயம் கொள்வார்களா, பாஜகவை ஒதுக்குவார்களா என்று தெரியவில்லை. இன்றைய default நிலையில் அவர்கள் பாஜகவைப் பெரிதாக ஒன்றும் ஆதரிக்கவில்லை. எனவே பாஜக இதற்கும் கீழே போய்விட முடியாது. மாறாக, பாஜக அவர்களுடைய ஆதரவை எதிர்காலத்தில் அதிகமாகப் பெறக்கூடும்.

இறுதியாக திராவிடவாதிகள். பொதுவாக இந்துமதத்தை எதிர்க்கும் இவர்களுக்கு இந்துத்துவவாதம் பேசுவோரை எதிர்ப்பதுதான் default position. திமுக சிறிதுகாலம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது என்றாலும் பொதுவாக பாஜகவுடன் கொள்கைரீதியில் ஒட்டுறவு இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் பாஜகவுக்குச் சுத்தமாக ஆதரவு இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் மோதிமீது நிறையத் தமிழர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பல கருத்துக் கணிப்புகள் காண்பிக்கின்றன. இதனால் பாஜகவால் ஒரு சீட்டுகூடப் பெற முடியாது என்பதுதான் நிதர்சனம். அதற்கான கட்டமைப்பு இன்று பாஜகவுக்கு இல்லை.

கடைசியாக இடதுசாரி லிபரல் கருத்தியல் கொண்டவர்கள். இவர்கள் பாஜகவை எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணம் பாஜக ஒரு மதவாதக் கட்சி என்பதே. அதற்கு பாபர் மசூதி, குஜராத் கலவரம் ஆகியவை உதாரணமாகக் காண்பிக்கப்படுகின்றன. எனவேதான் அத்வானியும் மோதியும் வில்லன்கள்.
(இப்போது மோதி பெரிய வில்லன். அத்வானி கொஞ்சம் தேவலாம்.)

ஆக, இந்துத்துவத்தை வெறுத்து செகுலரிசத்தை முன்வைக்கும் இடதுசாரி லிபரல்கள், செகுலர் கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே தமக்கு நன்மை என்று நினைக்கும் சிறுபான்மை மதக் கட்சிகள், இந்துத்துவம் என்பது உயர் சாதித்துவம் என்று நினைக்கும் தலித்துகள், இந்து மதம் என்பதே புரட்டு, எனவே இந்துத்துவ பாஜக எதிர்க்கப்படவேண்டியது என்று கருதும் திராவிடவாதிகள். இப்படி இவர்கள் எல்லோரும் எதிர்க்கும்போது பாஜகவை நான் ஏன் ஆதரிக்கவேண்டும்? அதுவும் முக்கியமாக மோதிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவேண்டும்?

என் காரணங்கள் தெளிவானவை. நான் என்னை மதச்சார்பற்றவன் என்றே நினைத்துக்கொள்கிறேன். கடவுள் நம்பிக்கை அற்றவன். பாஜக அரசியல்வாதிகளின் விசித்திரமான பல கருத்துகள் எனக்குக் குமட்டலை ஏற்படுத்துபவை. சமீபத்தில் ஒரு மகானுபாவர் உதிர்த்த கருத்துகள் (“கல்யாணம் ஆவதற்குமுன்பு பெண்கள் ஜீன்ஸ் போட்டுக்கொள்ளக்கூடாது. மொபைல் போன் வைத்துக்கொள்ளக்கூடாது.”) போன்று பெரும்பாலும் பிற்போக்கான கருத்துகள் பலவற்றை பாஜகவினரிடம் நான் பார்க்கிறேன்.
மும்பையில், உள்ளாடைகளைப் போர்த்தும் நிர்வாண பொம்மைகளைக் காட்சிக்கு வைக்கக்கூடாது என்பதை முன்மொழிந்த ஜோக்கர்கள், அல்லது வேலண்டைன் டே கொண்டாடக்கூடாது, பெண்கள் ஆண்களுடன் பாருக்குச் சென்று குடிக்கக்கூடாது போன்ற முட்டாள்தனமான கருத்துகளை முன்வைப்பவர்கள் இக்கட்சியில் அல்லது கூட்டணியில் உள்ளனர். அடிப்படைவாதத் தூய்மைவாத உணர்வு என்பது மிக அபாயமானது என்பது என் கருத்து. ஆர்.எஸ்.எஸ்மீது எனக்கு மிகுந்த சந்தேக உணர்வு உண்டு.
வி.எச்.பி போன்ற அமைப்புகள்மீது கடும் வெறுப்பு உண்டு.

என் கருத்துகள் பொருளாதாரத் தளத்தில் வலதுசாரிப் பார்வை கொண்டவை. நாட்டின் பாதுகாப்பு, தேசத்தின் தன்மானம், தேசத்தின் கௌரவம் ஆகியவையும் எனக்கு முக்கியம். ஆனால் சமூகத் தளத்தில் அதிகபட்ச தனிநபர் சுதந்தரம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கலாசாரப் போலீஸ்களைக் கடுமையாக வெறுக்கிறேன். என் பார்வையில் என் கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப்போகும் அரசியல் கட்சி ஏதும் இல்லை. எனவே நான் சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறேன்.
சமூகத் தளம் முக்கியமா, பொருளாதாரத் தளம் முக்கியமா என்று சிந்திக்கவேண்டிய நிலையில் இருக்கிறேன்.

காங்கிரஸின் பொருளாதாரப் பார்வை எனக்கு ஏற்புடையதாக இருந்து (நரசிம்ம ராவ்-மன்மோகன் சிங்), அதன் உட்கட்சி ஜனநாயகம் சிறப்பானதாக இருந்து, ஊழல் குறைவாக (அல்லது இல்லாததாக) இருந்தால் நான் கட்டாயம் அக்கட்சியையே ஆதரிப்பவனாக இருந்திருப்பேன். ஆனால் அப்படிப்பட்ட நிலை இன்று இல்லை. என்முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன என்று பார்க்கும்போது, மோதி தலைமையிலான பாஜக அதிக நம்பிக்கை அளிக்கிறது. கவனியுங்கள், பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று நான் சொல்லவில்லை; மோதியின் தலைமையிலான பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று சொல்கிறேன். வலுவான தொழில் வளர்ச்சி, வலிமையான பொருளாதாரம், தொலைநோக்குள்ள உள்கட்டமைப்பு, அழுத்தங்கள் அற்ற கல்விக்கொள்கை போன்றவற்றை முன்வைக்கும், தனிநபர் சுதந்தரத்தைக் கட்டிக்காக்கும் ஓர் அமைப்பாக, அதே நேரம் உலக அரங்கில் இந்தியாவுக்குச் சிறப்பான ஓரிடத்தைப் பெற்றுத்தரும் ஓர் அரசை மோதியால் அமைக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன். இந்த அமைப்பின்கீழ் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். கலாசார போலீஸ்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவர் என்று கருதுகிறேன்.
அப்போதும்கூட தினம் கருத்து முத்துகளை ஆர்.எஸ்.எஸ் ஆசாமிகளும் பாஜக அரசியல்வாதிகளும் உதிர்த்துக்கொண்டிருப்பர். அது எனக்குப் பிரச்னை இல்லை. அது என் வாழ்வையோ பிற குடிமக்களுடைய வாழ்வையோ பாதிக்கக்கூடாது. அமெரிக்காவின் அதி தீவிர கிறிஸ்தவ வலதுசாரிக் கருத்துகள் எப்படி அமெரிக்கப் பொதுமக்களுடைய வாழ்க்கையை பாதிக்காதவகையில் எதிர்க்கப்படுகின்றனவோ அதைப்போல பாஜக/ஆர்.எஸ்.எஸ் அல்லது பிற அதிதீவிர அடிப்படைவாதிகளின் தூய்மைவாதக் கருத்துகள் கட்டுக்குள் வைத்திருக்கப்படும் என்று நம்புகிறேன்.

இந்த என் நம்பிக்கை ஓர் இந்துவாக, ஒரு பிராமணனாக நான் பிறந்திருப்பதால்தான் எனக்குச் சாத்தியமாகியிருக்கிறது என்று ஒருவர் கருதக்கூடும். அவரை நான் குற்றம் சொல்ல முடியாது. ஒரு முஸ்லிமாக, ஒரு தலித்தாக மோதியின் ஆட்சியிடமிருந்து என்னதான் பெற்றுவிட முடியும் என்பதை அவரவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு தலித்தோ, ஒரு முஸ்லிமோ மோதியிடமிருந்து மோசமான ஒரு எதிர்காலத்தை மட்டுமே பெறுவார்கள் என்ற கருத்து தவறானது என்பது மட்டும் எனக்கு உள்ளுணர்வில் தோன்றுகிறது. எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு தலித்துக்கும் சமமாகவே கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன்.

அந்த நம்பிக்கை உள்ளவரையிலும் நான் மோதியை ஆதரிப்பேன்.

வாசகர்கள் கேள்வி கேட்கலாம், பத்ரி பதில் சொல்லுவார் என்று நினைக்கிறேன் :-)

Read More...

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை- 14

குழந்தைகளின் Multiple intelligences இல் linguistic intelligence பற்றி பார்த்தோம்.
இனி Logical / mathematical intelligence பற்றி …
சர்க்கஸ் கம்பெனியில் கயிற்றின் மேல் நடந்து வித்தை காட்டும் அந்த வித்தைக்காரரின் ,பள்ளிக்கே சென்று பயிலாத ஆறு வயது மகள்- மைசூர் பல்கலைக் கழகத்தில் தன் கால்குலேடிவ் திறனையும், மனப்பாடத் திறத்தையும் வெளிப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியப் பட வைத்தார்.. தனது மேதமேடிக்ஸ் இண்டலிஜன்ஸின் உச்சத் திறத்தால், தனது எட்டாவது வயதில் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் இது போன்ற இன்னொரு பெர்ஃபார்மென்ஸ் கொடுத்து இந்த நாட்டையே வியப்புக்குள்ளாக்கினார்.
அந்தக் குழந்தை வேறு யாருமல்ல- மனிதக் கம்ப்யூட்டர் என்று எல்லோராலும் புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவிதான்.
இந்த இண்டலிஜென்சை நன்கு கைவரப் பெற்றவர்கள்,ஒரு விஷயத்தை அலசி ஆராயும் ஆற்றல் பெற்றவராகவும்,கணிதத் துறை சம்பந்தமான சிக்கலான புதிர்களுக்குத் தீர்வை காணக் கூடியவராகவும், தாங்கள் காணும் விஷய்ங்களில் ஒரு அமைப்பைக் (pattern) காண முடிகிறவர்களாகவும், தொடர்பில்லாத பல சின்னச்சின்ன விஷயங்களில் இருக்கும் தொடர்பைக் காண முடிகிறவர்களாகவும்,பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணக் கூடியவர்களாகவும் இருப்பர்.


லாஜிக்கல் இண்டலிஜென்ஸில் சிறந்து விளங்கும் சில புகழ்பெற்ற மனிதர்கள்:
• ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (விஞ்ஞானி)
• அமர்தியா சென் (பொருளாதார நிபுணர்)
• மார்க் ஜீகர்பர்க் (ப்ரொகிராமர்- ஃபேஸ்புக்கை நிறுவியவர்)
• ராமானுஜன் (கணித மேதை)
• விஸ்வநாதன் ஆனந்த் (செஸ் சாம்பியன்).
லாஜிக்கல் இண்டலிஜென்ஸில் சிறந்து விளங்கும் குழந்தைகள் பின்னாளில் கீழ்க்கண்ட பணித்துறைகளைத் தேர்வு செய்யலாம்.
• சிஸ்டம் அனலிஸ்ட்
• சாஃப்ட்வேர் ப்ரொக்ராமர்
• அக்கவுண்டண்ட்
• கணிதத் துறை ஆசிரியர்
• செஸ் விளையாட்டு நிபுணர்
• பொருளியல் வல்லுநர்
• ஃபாரன்ஸிக் விஞ்ஞானி
• டிடெக்டிவ்
• வக்கீல்
லாஜிக்கல் ஸ்மார்ட் குழந்தைகள், எண்ணுவதில், புதிர் விடுவிப்பதில், கம்ப்யூட்டர் செயல்பாடுகளில், பரிசோதனை முயற்சிகளில் தங்களை குஷியாக ஈடுபடுத்திக் கொள்வர்.இயல்பாகவே இவர்களுக்கு, வகைப் படுத்துவது, அப்ஸ்ட்ராக்ட் விஷய்ங்களில் இருக்கும் ஒழுங்கமைப்பையும், அவைகளிடத்தே இருக்கும் தொடர்பையும் லாஜிக்கலாகப் பார்ப்பது பிடித்தமான விஷயம்.
பெரும்பாலான லாஜிக்கல் குழந்தைகள் இசையிலும் சிறந்து விளங்கும்.இசையைப் பயில்வதோ, பயிற்றுவிப்பதோ, கணிதத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன என்று முன்பே பார்த்தோம்.
லாஜிக்கல் / மேத்தமேட்டிக்கல் இண்டலிஜென்ஸைக் கற்றுக் கொடுப்பது எப்படி?
உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்றவாறு, கீழ்க்கண்ட பயிற்சிகளைத் தருவதன் மூலம் அவர்களை லாஜிக்கல் இண்டலிஜென்ஸில் பட்டை தீட்டலாம்.
• இன்றைக்கு எத்தனை கதை சொன்னேன் என்று கேட்டு பதில் பெறுவது, பலவகையான சிறு சிறு பொம்மைகளை ஒன்றாகக் கலந்து, அவைகளை போக்குவரத்து, காய்கறி, பழங்கள், விலங்குகள் வகை என்று வகைப் படுத்தச் சொல்வது
• பல்வேறு வகையான மரத்தின் இலைகளைக் கொடுத்து அவைகளை ஒன்று போல இருப்பவைகளை வகைப்படுத்தச் சொல்வது
• கூட்டல், கழித்தல் போன்ற கணித முறைகளை பொம்மைகள், காய்கறிகளைக் கொண்டு சொல்லித் தருவது
• காலையில் எழுவது முதல் இரவு உறக்கம் வரை உங்கள் குழந்தை என்னென்ன செய்கிறது என்று அட்டவணையிடச் சொல்வது

சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு:
• க்ராஸ்வேர்டு பஸில்கள் கொடுத்துப் போடச் சொல்வது
• ஒரு கதையின் முடிவை யூகப் படுத்தச் சொல்வது
• ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கான அடுக்கடுக்கான செயல்பாடுகள் என்னென்ன ?
• குழந்தை நேர்கொள்ளும் ஏதேனும் ஒரு பிரச்சனையைத் தீர்க்க என்ன விதமான இயந்திரத்தைக் கண்டு பிடிக்க வேண்டும்? அது எப்படி தீர்வு தருகிறது என்று கேட்பது
• ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு, அதற்க ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பேசக் கற்றுக் கொடுப்பது
• ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எடுத்துக் கொண்டு, அதில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளை வரிசைப் படுத்திக் கூறச் சொல்வது உம்: இந்திய சுதந்திரப் போராட்டம்
Spatial / Visual/ Graphical Intelligence:
Picture Smart என்றழைக்கப்படும் இந்த இண்டலிஜென்ஸ், பொருள்களை/ விஷயங்களை துல்லியமாக மூளையில் உள்வாங்கி கிரகித்து, அவற்றை ப்ராசஸ் செய்து நிஜமான படைப்புகளாக மாற்றும் திறனென்று சொல்லலாம். பொருள்கள் ஒன்றுக்கொன்று எந்த வகையில் தொடர்புள்ளவை என்று அறியும் அறிவு இது.
கிராஃபிக் விஷூவல் இண்டலிஜென்ஸில் சிறந்து விளங்குபவர்கள் டிசைன் செய்தல், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற செயல்களில் ஆர்வமாக இருப்பர்.
படங்களாக விரியும் அவர்களது சிந்தனைகளை சரியாக வெளிப்படுத்துவதில் திறனுள்ளவர்களாக இருப்பர்.
தமது வலது பக்க மூளையின் அபரிமிதமான ஆற்றலால் நல்ல படைப்பாளிகளாகத் திகழ்வர். புகழ்பெற்ற விஞ்ஞானிகளான டார்வின் தனது பரிணாம விதியை ஒரு மரத்திற்கு ஒப்பாக்க்கி, ஒவ்வொரு இனத்தையும் அதன் கிளைகளாகச் சொல்லியதும், ஃப்ராய்டு, மனித ஆழ்மனதை, மறைந்திருக்கும் ஐஸ்பெர்க்கிற்கு ஒப்புமை இட்டதும், டால்டன், அணுவை , சிறிய சோலார் சிஸ்டம் என்று சொன்னதும் அவர்களின் விஷீவல் இண்டலிஜென்ஸின் வெளிப்பாடுகளே.
மாலுமிகள், சிற்பிகள்,அறுவை சிகிச்சை நிபுணர்கள், எஞ்சினியர்கள், ஓவியம் தீட்டுபவர்கள் கிராஃபிக் டிசைனர்கள்,இந்த விஷீவல் / ஸ்பேசியல் இண்டலிஜென்ஸில் சிறந்து விளங்குகின்றனர்.
மோனாலிசா ஓவியத்தை வரைந்த லியனார்டோ டாவின்சி, கலீலியோ,ஸ்டீவன்,பிக்காசோ, ஸ்பீல்பர்க் போன்றவர்கள் விஷீவல் இண்டலிஜென்ஸில் சிறந்து விளங்கியவர்கள்
விஷீவல் / ஸ்பேஷியல் இண்டலிஜென்ஸை வளர்க்க உதவும் பயிற்சிகள்:
உங்கள் குழந்தைகளின் வயதிற்கேற்ப இவைகளில் சிலவற்றைத் தேர்வு செய்யலாம்.
• ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு வண்ணத்தில் எழுதிக் காட்டுதல்
• படங்களைக் கொண்டே கதை சொல்லுதல்
• ஒரு வார்த்தையை, அது குறிக்கும் அர்த்தத்தைப் போலவே வரைதல். உம்: Snake என்பதை பாம்பு வடிவில் எழுதுதல்.
• ஒரு செய்தித்தாள் அல்லது மேகஸின்களில் இருந்து எழுத்துக்களை வெட்டி ஒட்டச் சொல்லி வார்த்தைகளை உருவாக்கச் சொல்லுதல்
• டிரஸர் ஹண்ட் வைத்து, அதற்கு விடையைச் சொல்லி, உங்கள் குழந்தையை அதை அடையும் மேப்பை வரையச் சொல்லுதல்
• பல்வேறு விதமான ஓவியங்களைக் காட்டி அவைகளில் இருந்து அவர்கள் புரிவதைக் கேட்பது.
• ஒரு பொருளைப் பார்த்து படத்தை வெவ்வேறு கோணங்களில் வரையச் சொல்வது, மனதிலிருக்கும் ஒரு படத்தை வரையச் சொல்வது
ஆர்க்கிடெக்ட், ஆர்டிஸ்டு, எஞ்சினியர் போட்டோகிராஃபர், இண்டீரியர் டிசைனர், ஃபேஷன் டிசைனர் போன்ற துறைகளை இவர்கள் பின்னாளில் தேர்வு செய்யலாம்.
டாக்டர் பிரகாஷ்
www.rprakash.in

போன வாரம் நீயா நானாவில் பைக் ஓட்டும் பெண்கள் விதவிதமாக எப்படி பைக்கு ஏற்றார் போல டிரஸ் செய்துக்கொள்ளவது என்று பேசினார்கள். இதை எல்லாம் எங்கே கற்றுக்கொள்கிறார்கள் ?

Read More...