1. தவமாய் தவமிருந்து 
சற்றே நம்பிக்கைக் குறைவுடன்தான் இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன் என்றுஆரம்பிக்க மாட்டேன் கவலைபடாதீர்கள். அமெரிக்க கிராமத்திலிருந்து ஹீரோ கோவைக்கு வந்து செட்டில் ஆகிறார். அமெரிக்காவில் தமிழ் வலைப்பூக்களுக்காக இவர் செய்த சாதனைகளை ஃப்ளாஷ்பேக்கில் இடைவேளை வரை ஓட்டுகிறார்கள். அத்தனை வலைப்பூக்களையும் ஒன்றிணைத்து திரட்டி ஒன்றை உருவாக்குகிறார். எல்லா வலைப்பூக்களையும் பாசத்துடன் ஒன்று திரட்டி வளர்த்து பெரிய ஆளாக்கும் பாசமிகு தந்தை ரோலில் (வலை) பின்னியிருக்கிறார்.
இடைவேளை வரை வில்லன் ரோல் என்று யாருக்கும் இல்லை. பிறகு திடீரென்று மெகாசீரியல் மாதிரி திரும்பிய இடமெல்லாம் வில்லன்கள் முளைக்கிறார்கள். தந்தை சற்று கண்டிப்பு காண்பிக்கும்பொழுது பாசபந்தங்கள் எப்படி வேஷம் போட்டார்கள் என்று முடிக்கிறார் இயக்குனர். அப்போது பின்னனி இசையில் 'ஷேம் ஷேம் பப்பி ஷேம்' பாடல் நம் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறது.
2. வசூல் ராஜா எம்.பி.பி.ஸ்
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்!!! - டீ, காப்பி செலவுக்கு நிதி திரட்டும் இந்த காலத்தில் ஒரு ஏழை மாணவியின் படிப்பு செலவுக்கு உதவி செய்ய நீதி திரட்டுகிறார் படத்தின் கதாநாயகன் பாலா!!!!!!. அப்படி திரட்டிய நிதியை அந்த பெண்ணுக்கு தருகிறார்!!!. தமிழ் வலைப்பதிவில் இப்படியா என்று மழை பெய்கிறது!!. இதில் இயக்குனரின் டச் தெரிகிறது. ஹீரோ நடுவில் பல பாடல்களுக்கு பல்லவியை மட்டும் பாடி மற்றவர்களை சரணம் பாட வைப்பது நல்ல தமாஷ்!!!. மனிதநேயத்தை நன்றாக வலியுறுத்தியுள்ளதால் இயக்குனரை பாராட்டலாம்!!!முக்கிய குறிப்பு: தமிழ் வலைப்பதிவில் இதெல்லாம் கூட நடக்கிறது என்பதைக் குறிக்க ஆச்சரியக் குறி !. வேறு எந்த உள்ளர்த்தமும் இல்லை!!! நம்புங்க !!!!
3. சண்டைகோழி
முழுக்க முழுக்க வெட்டு, குத்து என்று வன்முறைகள் நிறைந்த படம். ஹீரோ ஜப்பானிலிருந்து படித்துவிட்டு இந்தியா திரும்பும் வழியில் ஏர்போர்ட் பிரௌசிங்க் செண்டரில் ஒரு சண்டையில் ஈடுபட நேர்கிறது. தொடர்ந்து விமானத்தில் லாப்டாப் வைத்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டே தமிழ்நாடு வந்து சேர்கிறார். (ஏர்போர்ட்டில் டிக்கெட் கேட்கும் அதிகாரிகளை (கழுத்தை) அறுத்துவிடுவேன் என்று மிரட்டுவது நல்ல காமெடி)சண்டையின் நடுநடுவே திருட்டு வி.சி.டியில் 'சந்திரமுகி' பார்த்து ரசிக்கிறார்.
ஒரு எலி க்வாண்டம் கணினி பற்றி சொன்ன பாய்ண்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். எலி எப்போதும் புலியாக முடியாது என்பதை வலியுறுத்தும் படம். இந்தப் படத்தில் இயக்குனருக்குச் சமமாக சண்டைக்காட்சிகள் அமைத்த ஸ்டண்ட் மாஸ்டரின் பங்கும் சிறப்பாக அமைந்திருக்கிறது. பலர் தாக்க வரும்போது 'இப்பொழுது நேரமில்லை, எனக்கு அவசரமாக போகனும் என்று சொல்லி கிளம்புகிறார். எங்கே போகிறார் என்பது எடிட்டரின் கைவண்ணத்தால் தெரியாமல் போகிறது. எதையாவது அறுத்துதொலைக்க போகிறார் என்று சென்சாரில் 'யூ' சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டதாக கேள்வி. வெங்கட் இந்த படத்துக்கு பிரமாதமாக இசையமைத்திருக்கிறார். ஜால்ரா ஒலி DTSசில் கேட்க வித்யாசமாக இருக்கிறது. பாடல்களில் ஆபாசம் இல்லை, ஆனால் திரைக்கதையில் வன்முறை, வசனத்தில் விரசம்.
முக்கிய குறிப்பு : கொஞ்சம் இருங்க டீ குடித்துவிட்டு சமயம் இருந்தால் இந்த பட ஸ்டிலுக்கு ஒட்டு வேலை செய்கிறேன்.
4. அந்நியன்
அந்நியன் - ஸ்பிலிட் பெர்சனாலிட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். படத்தின் ஹீரோ யாராவது 'சாதி' என்று சொன்னால், கோபம் வந்து கெட்ட வார்த்தையில் கண்டபடி திட்டுகிறார். படத்திற்கு 'A' சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள். சாதி பற்றி வசனம் பேசும் இவர் படத்தில் 'ஐயங்காரு வீட்டு அழகே' என்று பாடுவது நல்ல தமாஷ். ஒரே மனிதனுக்கு பல பர்சனாலிட்டி கதை என்று நினைத்தால், பல பர்சன்களும் ஒரே பர்சனாலிட்டியுடன் வெவ்வேறு ஆட்களாகக் கூட வருகிறார்கள். க்ராஃபிக்சுக்குப் பதில் ஹாக்கிங்க் நிறைய நிறைந்துள்ளது.பொது மக்களிடயே இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குடும்பத்துடன் பார்க்க கூடாத படம். அந்நியனாக ஒரு சீனில் சிவபெருமான் போல் வேஷம் போட்டுக்கொண்டு கூலிங் கிளஸோடு வருவது நன்றாக இருக்கிறது. தியேட்டரில் டிக்கெட்டுடன் காதில் வைத்துக்கொள்ள பஞ்சையும் தருகிறார்கள்.
முக்கிய குறிப்பு: திருட்டு விசிடியில் பார்ப்பவர்கள் டிவியை மியூட் செய்து பார்க்கவும். இல்லை காதுலேர்ந்து ரத்தம் வரும்.
5. கஜினி
கஜினி - நல்ல தமிழ்ப் படம் என்று போனால் என்ன படம் என்றே தெரியவில்லை. சப் டைட்டில் German மற்றும் French மொழிகளில் மாறி மாறி வருகிறது. இவர் எதை எழுதினாலும் தன் உடம்பிலும் அதை எழுதுவது போல் உள்ள கதாப்பாத்திரம். தவறாமல் 4800161 என்ற எண்னையும் கூட சேர்த்து எழுதுகிறார். இவருக்கு மறதி வியாதி அதனால் எங்கு சென்றாலும் தன் நம்பர் & போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார். வில்லன்கள் இவரை போல் ஒரு போலி கதாபாத்திரத்தை கிளோனிங் மூலம் உருவாக்குகிறார்கள். அதனால் கதாநாயகன் எப்போது போலி போலி என்று பினாத்துகிறார். கடைசி கோர்ட் சீனில் இவருக்கு தேங்காய் போளி, பருப்பு போளி கொடுக்கிறார்கள். சுபமாக முடிகிறது. சோ, அருண் கவுரவ வேடம் ஏற்று படத்தை மேலும் சொதப்பி விடுகிறார்கள்.முக்கிய குறிப்பு: இந்த சுட்டியில் உங்கள் விட்டிலிருந்து ஒரு எலியை பிடித்து அதன் வாலை அதன் மேல் வைக்கவும். 4800161 என்ற நம்பர் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய/சந்திர கிரகணத்தின் போது தெரியாது.
6. நியூ ( பெண்) அந்தாங்க புதுமை பெண்
இது ஒரு ஹீரோயின் சப்ஜக்ட். நேரில் பார்க்கும்போது சின்னவராகவும் எழுதும்போது வயதானவராகவும் மாறும் ஒரு வித்யாசமான பாத்திரம் பற்றிய கதை. படம் ஹாலிவுட் ரேஞ்சிற்கு இருக்கிறது-குறிப்பாக பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகள். இட்லிவடைக்கு மீசை முளைக்காததால் இந்தப் படத்தை மட்டும் தியேட்டர் போய்ப் பார்க்க முடியவில்லை. வி.சி.டி.யிலேயே பார்த்துவிட்டேன். திரைக்கதையில் நிறைய சொதப்பல்கள். 'வுமன்கைண்ட்' என்று ஒரு மாபெரும் இயக்கம் ஆரம்பித்து பெண்கள் எருமைகளுக்கு வாழ்க்கைப் படுவது பற்றி ஒரு கவிதை எழுதிகிறார். கவிதை எழுதிமுடித்த பிறகு ஹீரோயினே நுனிப்புல் மேயப்போவதைப் பார்த்தால் யார் எருமை என்று குழப்பம்தான் மிஞ்சுகிறது. வசனத்திலும் பாத்திரப்படைப்பிலும் கவனம் செலுத்திய அளவுக்கு அடிப்படைத் திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.ஹீரோ என்று யாரையுமே சொல்லிவிடக்கூடாது என்று கவனமாக எல்லா ஆண்களையும் வில்லன் ஆக்கி இருக்கிறார்கள். அதாவது பெண்கள் என்ன திட்டினாலும் எல்லா ஆண்களுமே அமைதியாக இருந்து ஆணாதிக்கத்தை நிரூபிக்கிறார்கள்.
ஆண்களை எதிர்த்துக்கொண்டே ஆணுடன் வாழ்வதுதான் புதுமைப்பெண்ணுக்கு அடையாளம் என்று க்ளைமாக்சில் ஹீரோயின் சொல்லும் காட்சி நெஞ்சை உருக்குகிறது. (டைவர்ஸ் வாங்கும் எண்ணமிருந்தால்) குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.
முக்கிய குறிப்பு: சிம்ரன் படத்தை கெடுக்க வேண்டாம் என்று நியூ பட ஸ்ட்லுக்கு ஒட்டு வேலை எதுவும் செய்யவில்லை. மன்னிக்கவும்.
7. மகா நடிகன்

படத்தை எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் பிரகாஷே நடித்து இருக்கிறார். படத்தின் ஹீரோ பொதுமக்களுடன் நன்றாகப் பழகிக்கொண்டே எல்க்ய வ்யாதியாகவும் அதே சமயம் Batman, spiderman, shakthiman போன்று வலைப்பதிவாளர்கள் சந்திப்பு ஒருங்கினைப்பாளராக பணிபுரியும் இளைஞராகவும் செம கலக்கு கலக்கியிருக்கார்.
அனைவரும் பாராட்டும்போது அடக்கமாக வேறு வேலை கிடைக்காததால்தான் இப்படியொரு வேலையைத் தேர்ந்தெடுத்தேன் என்று க்ளைமேக்சில் சொல்லும்போது நம் மனதைத் தொடுகிறார்.
பெண்களைத் தாயாக மதிப்பதாக மேடையில் பாடும் அந்த ஒரே ஒரே ஒரு பாட்டு மட்டும் நன்றாக உள்ளது. பாடலைப் பாடிமுடித்துவிட்டு மேல்கைண்ட் அங்கத்தினர்களைப் பார்த்து கண்ணடிப்பது அதைவிட நன்றாக உள்ளது.
படத்தில் பாடல்களை விட நேர்க்காணல்கள் அதிகமாக உள்ளன. இலக்கியவாதிகளுடன் ஆட்டோவில் செல்லும் போது பேசியதை பேட்டி என்று நன்றாக ஜல்லியடிக்கிறார். எழுதுவதைக் குறைத்துக்கொண்டு நிறையப் படிக்கப்போவதாக உருக்கமுடன் ப்ரகாஷ் சொல்வதுடன் தமாஷாக படம் முடிகிறது.
முக்கிய குறிப்பு: இந்த படத்திற்கு பிறகு நமிதாவுடன் நெருக்கமாக இருப்பதாக Blogwood'ல் கிசு கிசு. அப்படியா பிரகாஷ் சார் ?
8. குண்டக்க மண்டக்க

இட்லிவடை என்று பெயர் வைத்தால் தமிழர்கள் நிச்சயம் படம் பார்க்க வருவார்கள் என்ற இயக்குனரின் துணிச்சலை முதலில் பாராட்டவேண்டும். இட்லிவடை ஒருவரா அல்லது இரண்டு பேரா என்று கடைசி வரை சொல்லாமல் இருப்பது படத்துக்கு பிளஸ் பாய்ண்ட். இப்படி இட்லியையும் வடையையும் வைத்துக்கொண்டு எவ்வளவு நாள் குப்பை கொட்ட போகிறார் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
படம் முழுக்க பர்தா போட்டுக்கொண்டு வருவதால் யார் நடிக்கிறார்கள் என்பது கடைசிவரை தெரியவில்லை.
ஹீரோயின் கால்ஷீட் கிடைக்காததால் ஒரே ஒரு கவர்ச்சிப்படம் மட்டுமே காண்பித்து சமாளித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. படம் முழுக்க கிராபிக்ஸ் வைத்து ஏதோ ஒப்பேத்துகிறார் அவ்வளவுதான்.
குண்டக்க மண்டக்க படம் பார்த்தவுடன் கருத்து சொல்ல பின்னூட்டப் பெட்டி ஒன்று வைத்திருக்கிறார். அந்தப் பெட்டியை நீங்களும் பார்க்கவேண்டுமா? கீழே உள்ள comment சுட்டியை க்ளிக் பண்ணினால் போதும்.
முக்கிய குறிப்பு: எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.















